Tuesday 26 April 2016

நினைவலைகள்

                                                 இப்போதெல்லாம் எந்த இழப்பும் பேரிழப்பாகத் தெரிவதில்லை தந்தை, தாய் எனும் பெரும் பொக்கிஷத்தை இழந்து விட்டதால். 2012 ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை ICU வில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்திருந்த தந்தை தன்னால் இதற்குமேலும் சுவாசிக்க முடியாது என முடிவு செய்து தன் சுவாசத்தை நிறுத்திய நாள். அவர் கணித்தது தவறு. அவர் இன்னும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறார், எங்கள் மூச்சில், பேச்சில், நினைவில்.

                                                     உலகிலேயே எனக்குப் பிடித்த பெயர் அருணாசலம். உங்கள் பெயர் ஒன்று போதும், என் பிறவிப் பெருங்கடலைக் கடக்க. இப்போதெல்லாம் பெயர்கள் எதையேனும் படிக்க நேர்ந்தால் அதில் பத்மா அருணாசலம் இருக்கிறார்களா எனத் தேடுகிறேன். 

                                                   உங்களை வந்து அடையும் நாள் கண்டிப்பாக உலகிற்கு என் கடமை என கடவுள் எதை எழுதி வைத்திருகிறாரோ அதை குருவருளால் செவ்வனே செய்து வருவேன்.

                                                           தந்தையும் தாயும் பிள்ளைகளான எங்களை நிறைந்து ஆசீர்வதிக்க வேண்டும். குலம் தழைக்க, உங்கள் குல வாரிசுகள் நாட்டிற்கு நல்ல குடிமக்களாக வாழ, வளர , துன்பம் நேர்கையில் யாருக்கும் யாழ் எடுத்து இசைக்கும் இன்னிசைப்பானாக இருக்க, நல்ல லட்சிய வீரர்களாக இருக்கவும், இலட்சியத்தில் வெற்றி பெறவும் உங்கள் ஆசி  நிழலாக எங்களோடு  தொடரவும் ஆசீர்வதியுங்கள்.  

அப்பா அம்மா பத்மா அருணாசலம் துணை.

No comments:

Post a Comment